வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

சாத்தான்குளம் விவகாரம் - காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில், மற்ற 9 பேரும் மதுரை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் வெயில் முத்து, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின்போது வாதாடிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.