ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சமூக இடைவெளியின்றி மதுவாங்க திரண்ட குடிமகன்கள்!

 

Image

தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்படும் நிலையில், மதுரையில் நேற்று சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் மதுவாங்குவதற்கு திரண்டனர்.

தமிழகத்தில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாளை  முழு ஊரடங்கு உத்தரவு என்பதாலும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள மதுபான கடைகளில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மது வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் திரண்டது.

அரசின் எந்தவொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமலும், சமூக இடைவெளி இன்றியும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவிந்த குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.