செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

சென்னையில் தனி மனித இடைவெளியுடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை!

 சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் 2வது நாளாக இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் தனி நபர் இடைவெளியுடன் மற்றும் முகக்கவசத்துடன் காவல் படையினர் பங்கேற்றனர். 

இந்தாண்டுக்கான சுதந்திரதின கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க கூடாது எனவும், காவல்துறையினரின் அணிவகுப்புக்கு பதில் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் மாவட்டங்களில் நடைபெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 500க்கும் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக அவர் பங்கேற்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.