ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்!

Image

புதுச்சேரியில், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வார்டில் சுத்தம் செய்யப்படாமல் இருந்த கழிவறையை, தானே சுத்தம் செய்த நிகழ்வு, அங்கிருந்த ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

புதுச்சேரியில் கோவிட் மருத்துவமனையாக செயல்படும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வார்டில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கழிவறைக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, சுத்தம் செய்யப்படாமல் இருந்த கழிவறையை பார்த்ததும், ஏன்  சுத்தம் செய்யவில்லை என ஊழியர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், ஊழியர்கள் சுத்தம் செய்தும் கரை போகவில்லை என கூற, அருகில் இருந்த துடைபானை எடுத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவே சுத்தம் செய்தார். அமைச்சரின் இந்த செயலால், வேறு ஏதும் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்த ஊழியர்கள் திகைத்து நின்றனர்.