Home »
» 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை! July 31, 2018
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமியும், உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் ஒரு சிறுமியும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வ தற்கான மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு, 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது
Related Posts:
குஜராத் மாநிலத்தில் தொடங்கியது சர்வதேச பட்டம் விடும் திருவிழா! January 07, 2019
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மகா சங்கராந்தி விழாவையொட்டி, 30வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில், தென்கொரியா, சீனா, மலேசியா உள்… Read More
1998ல் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை! January 07, 2019
source ns7.tv
பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்க… Read More
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் புதிய செயலி கோவையில் அறிமுகம்! January 08, 2019
source : ns7tv
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் புதிய செயலியை கோவை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
தலைக்கவசம… Read More
பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! January 08, 2019
Authors
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தரமறுக்கும் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் ச… Read More
பிளாஸ்டிக் பைகளுக்கான தடை எதிரொலி; மீண்டும் புத்துயிர் பெற்ற துணிப்பைகள்! January 08, 2019
source: ns7.tv
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு எதிரொலியால், துணிப்பை உற்பத்தி புத்துயிர் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூ… Read More