ஞாயிறு, 29 ஜூலை, 2018

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பின்தங்கி உள்ளதாக ஆய்வில் தகவல்! July 28, 2018

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தாலும், இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் பின்தங்கி உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் இண்டர்நெட் பயன்பாடு குறித்து 39 நாடுகளில் Pew என்ற ஆய்வு மையம் சார்பில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் உலகளவில் இரண்டிலும் தென்கொரியா முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் 22 சதவீதம் பேர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல் ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 51 சதவீதமாக இருப்பதாகவும், செல்போன் பயன்படுத்தாமல் இருப்போர் எண்ணிக்கை 26 சதவீதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும், இது சில ஆப்பிரிக்க நாடுகளை விட குறைவாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல் 18 முதல் 36 வயதுடைய நபர்கள் 35 சதவீதம் பேரும், 37 வயதுக்கு மேற்பட்டோர் 13 சதவீதம் பேர் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.