புதன், 18 ஜூலை, 2018

ஜப்பானில் கனமழையால் 200பேர் உயிரிழந்ததையடுத்து தற்போது வெயிலுக்கு 14 பேர் பலி! July 17, 2018

Image


ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு 200 பேர் உயிரிழந்த நிலையில் உடனடி மாறுதலாக அங்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதாவது அதிகபட்சமாக அங்கு சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி சராசரியாக ஜப்பானின் அனைத்து பகுதிகளிலும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதையடுத்து கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடையின்றி வெளியில் வரமுடியாத அளவு வெப்பநிலை ஜப்பானை வாட்டிவதைத்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானோர் வெளியில் வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

சோகம் என்னவெனில் சமீபத்தில் மழை காரணமாக ஏற்கனவே 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் 

Related Posts:

  • பள்ளி புறக்கணிப்பு முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மா… Read More
  • கிட்னியில் கற்கள் கிட்னி கல் என்றால் என்ன?சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த வி… Read More
  • ஜமாஅத்துடன்) தொழுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்சிறப்புடையதாகும்.அறிவிப்பவ… Read More
  • News Read More
  • சாலை விபத்தில் புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர… Read More