ஞாயிறு, 29 ஜூலை, 2018

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்திய சிறுமி! July 29, 2018

Image

ஆப்ரிக்கா நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில்  ஏறி சாதனை படைத்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த 17 வயது சிறுமி சிவாங்கி பதாக். சிறுவயதில் இருந்தே வித்தியாசமான விஷயங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறிய பெண் அருணிமா சின்ஹாவின் வீடியோக்களை பார்த்து, மலை ஏற்றத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

பின்னர், கடும் முயற்சி செய்து மலை ஏற்றம் செய்வதை கற்றுக்கொண்டார். 3 நாட்களில் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தனது பெற்றோர் மிகவும் உதவி செய்ததாகவும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று சிவாங்கி தெரிவித்தார்.

இவர், எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்களிலேயே மிகவும் இள வயது உடையவர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: