வியாழன், 26 ஜூலை, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி! July 25, 2018

Image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்ஜிசி சார்பில் பல்வேறு பகுதிகளில் கிணறு தோண்டப்பட்டது. இதே போல், திருப்புல்லாணி அருகே வளையனேந்தல் என்ற கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சுமார் 10 இடங்களில் எண்ணெய் நிறுவன கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. வளையனேந்தல் குடியிருப்பு பகுதிகளை சுற்றி இன்று திடீரென  தரையில் வெடிப்பு ஏற்பட்டது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
திடீரென தரையில் வெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.