செவ்வாய், 31 ஜூலை, 2018

ஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்! July 30, 2018

Image

டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, ஆளுநர் அமைத்த குழுவின் அறிக்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.

 டெல்லியில் அரசு மற்றும் பொதுஇடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, துணை நிலை ஆளுநர் பைஜால், குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த குழு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்,  இந்த பரிந்துரைகளை வாசித்து காட்டினார். பின்னர் அந்த அறிக்கையை மேடையிலேயே கிழித்தெறிந்தார். கண்காணிப்புக் கேமரா பொருத்த காவல்துறையின் அனுமதி அவசியமில்லை என்று குறிப்பிட்ட  கெஜ்ரிவால், டெல்லி நகரமெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் பெருமளவில் குற்றங்கள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்  .

பொது மேடையில் கெஜ்ரிவால் நடந்துக் கொண்ட விதத்தால் டெல்லி முதல்வர் - ஆளுநர் இடையேயான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.