ஞாயிறு, 29 ஜூலை, 2018

விதைப் பண்ணை மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! July 29, 2018

Image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருந்த விதைப் பண்ணை, மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் மத்திய மாநில விதை பண்ணை செயல்பட்டு வந்தது. பசுமை பூத்துக் குலுங்கிய பூஞ்சோலை ஆசியாவிலேயே இரண்டாவது புகழ் பெற்ற பண்ணை

வீரியம் மிக்க விதைகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த பண்ணை இது எல்லாம் கடந்த கால கதை. தற்போதைய நிலையோ தலைகீழ், இந்த விதைப்பண்ணை மூடப்பட்டுள்ளதால், இதனை நம்பி வேலை செய்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் க்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று கூறுகின்றார் அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்.

விதைப் பண்ணை மூடப்பட்டுள்ளதால், இதில் வேலை செய்த தொழிலாளர்கள், மாற்று வேலைக்காக வெளி மாநிலங்களில் அண்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மண்ணுக்கு தகுதியற்ற, விவசாய நிலங்களை பாழ்படுத்தக் கூடிய நீலகிரி மரங்கள் இங்கு நடப்படுவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயம் அழியும் சூழல் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

அத்துடன் விதைப்பண்ணையை மூடியதால், இங்கு அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள், 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் பாழடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, மீண்டும் விதைப் பண்ணையாகவோ, விவசாய கல்லூரியாகவோ மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், மூடப்பட்டது விதைப் பண்ணை மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் அவற்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.