செவ்வாய், 31 ஜூலை, 2018

மலையில் இருந்து இறங்க வழி தெரியாமல் 2 நாட்கள் தவித்த ரஷ்ய பயணி மீட்பு! July 30, 2018

Image

திருவண்ணாமலை மலை மீது ஏறி, கீழே இறங்க வழி தெரியாமல் 2 நாட்களாக தவித்து வந்த ரஷ்ய சுற்றுலா பயணியை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். 

ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு சுற்றுளா வரும் வெளிநாட்டினர் சிலர் திருவண்ணாமலை மலை மீது ஏறி சென்று சுற்றிப் பார்க்கின்றனர். 

இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் என்னும் சுற்றுளாப் பயணி திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது அவர் திருவண்ணாமலை மலையின் மீது ஏற முயற்சித்துள்ளார். சிறிது தூரம் ஏறிய அவர் ஒரு கட்டத்துக்கு பிறகு கீழே இறங்க வழி தெரியாமல் தடுமாறினார்.

இந்நிலையில் அலெக்சாண்டர் உடன் வந்த பெண் நிக்கா, மலையின் மீது ஏறிய அலெக்சாண்டர் திரும்பவில்லை என திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து 16 போலீசார், நான்கு வனத் துறையினர் உட்பட 20 பேர் அடங்கிய குழு அலெக்சாண்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மலையின் தென்மேற்கு பகுதியிலிருந்த அலெக்சாண்டரை 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.