திங்கள், 23 ஜூலை, 2018

இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! July 23, 2018

Image


வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து பல அணைகள் நிரம்பியது மட்டுமின்றி, காவிரி ஆறு மற்றும் பல ஆறுகளின் கரையோரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.