ஞாயிறு, 29 ஜூலை, 2018

இறந்த மகளின் நினைவாக 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வரும் கிளார்க்! July 29, 2018

Image

தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் கிளார்க் ஒருவர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள மக்டம்புரா பகுதியில் உள்ளது MPHS அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவிகளின் கல்விச் செலவை அதே பள்ளியில் பணியாற்றி வரும் கிளார்க் ஒருவர் ஏற்றுள்ளார். இந்த ஆண்டு அவர்களின் பள்ளிக் கட்டணத்தை அவரே செலுத்தியுள்ளார்.

பசவராஜ் என்ற அந்த கிளார்கின் மகளான தானேஸ்வரி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரின் நினைவாக அவரின் பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 45 பேரின் கல்விச் செலவை ஏற்றுள்ளதாக பசவராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அப்பள்ளியில் படித்து வரும் பாத்திமா என்ற மாணவி கூறுகையில், பசவராஜ் அவர்கள் அவரின் மகளின் நினைவாக ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும் என் போன்ற மாணவிகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார். அவரின் மகளின் ஆண்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.

கிளார்க் பசவராஜின் இச்செயலை பள்ளி மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Posts:

  • MK Patti - Today தீர்ப்பில் எதிரொலி தமிழக முதல்வர் ஜெயலலிதா விற்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கின்  தீர்ப்பு 27.09.2014, இன்று தீர்ப்பு வழங்க பட்டது . ஜெய… Read More
  • ஏகத்துவ தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை … Read More
  • expanded areas of the Grand Masjid in Makkah More than 2 million pilgrims, who are to perform Haj this year, can use the newly expanded areas of the Grand Masid in Makkah for prayers, Custodian … Read More
  • அன்னிஸா - பெண்கள் அத்தியாயம் : 4அன்னிஸா - பெண்கள்மொத்த வசனங்கள் : 176 மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்… Read More
  • குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்! நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடைய… Read More