செவ்வாய், 24 ஜூலை, 2018

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை! July 24, 2018


இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான இவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கள் நாட்டு கடற்பகுதியில் மீன்பிடிப்பதாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடிப்பதாகவும் கூறி, மீனவர்களின் 2 நாட்டுப் படகுகளை சிறைப்பிடித்துள்ளனர். 

அதில், ஒரு படகை இலங்கை கடற்படையினர் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும், படகில் இருந்த 7 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Image