ஞாயிறு, 29 ஜூலை, 2018

​உலக அளவிலான பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற நிதியுதவி கோரும் ஏழை மாணவி! July 28, 2018


Image

தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலான சப்-ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்க தனக்கு, நல்ல உள்ளங்கள் நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என, ஏழை மாணவி லோகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த லோகப்பிரியா அண்மையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவில் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் 18வது உலக சப்-ஜூனியர் மற்றும் 36வது ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

எனினும் போதிய வசதியில்லாததால், ஏழை மாணவியான லோகப்பிரியாவின் நிலை பற்றி நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, மதுரை தனியார் மருத்துவமனை ஒரு லட்சம் நிதியுதவி வழங்கி லோகப்பிரியாவை ஊக்கப்படுத்தியது. அதனை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பளுதூக்குதல் வீராங்கனை லோகப்பிரியா, நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 


SOURCE: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/7/2018/poor-student-asking-fund-participate-world-level-weight-lifting