Home »
» மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்! August 13, 2018
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை காலமானார். 89 வயதான அவர், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக சோம்நாத் சட்டர்ஜி காலமானார். சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தார்.சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய சோம்நாத் சட்டர்ஜியின் இழப்பு, மேற்குவங்க மாநிலம் மற்றும் நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி ட்விட்டரில், நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் எனவும், ஏழை மக்களுக்காக பாடுபட்டவர் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கட்சிகளை கடந்தும் நேசிக்கப்பட்ட தலைவர் என நினைவுக்கூர்ந்துள்ளார்.
Related Posts:
“வாக்களிக்காவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து...!” சோம்பேறி குடிமகன்களுக்கு செக் வைத்த அரசு! May 17, 2019
வாக்காளர்கள் தேர்தலில் தங்களது வாக்கை செலுத்தாவிட்டால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யபடும் என்ற ஆஸ்திரேலியா அரசின் சட்டம் அனைத… Read More
ஆளுநர் தாமதித்தால் குற்றவியல் சட்டபடி தமிழக அரசே 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல்...! May 16, 2019
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படு… Read More
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சஞ்சய் தத் - பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனிக்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் - தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், 7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யும் முடிவுக்கு ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை தமிழக ஆட்சியாளர்களே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிமேட… Read More
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! May 17, 2019
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக விவசாயிகள் வயலில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ட… Read More
சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவு! May 16, 2019
பூமி மற்றும் நிலவுக்கு இடையேயான தூரத்தை துல்லியமாக கணிக்கும் வகையில், சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து… Read More