Home »
» சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முயற்சியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு! August 4, 2018
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
Related Posts:
ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி : அன்வர் ராஜா அதிமுக எம்.பி February 24, 2019
தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் நடைபெற்… Read More
வங்கிகளில் பிடிக்கப்பட்ட அபராத தொகை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் திருப்பி அளிக்கப்படும் : ப.சிதம்பரம் February 24, 2019
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ட இருப்புத் தொகை இல்லாத காரணத்திற்காக பிடிக்கப்பட்ட அபராத தொகை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திருப்பி அளிக்க… Read More
சேலம் அருகே பயங்கர காட்டுத் தீவிபத்து: நேரில் பார்வையிட்டார் ஆட்சியர் ரோகினி! February 24, 2019
சேலம் அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வனப்பகுதியில் சிக்கிய 30 குடும்பத… Read More
உலகிலேயே, இந்தியாவில் தான் அதிகமாக போலி செய்திகள் பரப்பப்படுகின்றன...அதிர்ச்சி ரிப்போர்ட்! February 24, 2019
source ns7.tv
உலகிலேயே, இந்தியாவில்தான் அதிக அளவு போலி செய்திகள் பரப்பப்படுவதாக சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் த… Read More
மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! February 24, 2019
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமா… Read More