புதன், 17 ஜூலை, 2019

குல்புஷன் ஜாதவ் வழக்கு கடந்து வந்த பாதை! July 17, 2019

 ns7.tv
Image
பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த தகவல்களை பார்க்கலாம்.

 3 மார்ச் 2016 - பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது 
➤ 25 மார்ச் 2016 - ஜாதவ் கைது குறித்து இந்திய அரசுக்குத் தகவல் அளித்தது பாகிஸ்தான்
➤ 7 டிசம்பர் 2016 - ஜாதவுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு  அமைச்சர் தகவல் 
➤ 6 ஜனவரி 2017 - பாகிஸ்தான் விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு குறித்த கோப்புகளை ஐக்கிய நாடுகள் அதிகாரிகளிடம் பாக். சமர்ப்பிப்பு 
➤ 10 ஏப்ரல் 2017 - பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்தது 
➤ 26 ஏப்ரல் 2017 - ஜாதவிடம் பேசுவதற்கான இந்திய அரசின் கோரிக்கை பாக். அரசால் நிராகரிப்பு 
➤ 8 மே 2017 - ஜாதவ் வழக்கு குறித்து இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் முறையீடு 
➤ 9 மே 2017 - ஜாதவின் மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம் 
➤ 15 மே 2017 - ஜாதவ் வழக்கு தொடர்பாக இந்திய,பாகிஸ்தான் அரசுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வாதம் 
➤ பிப்ரவரி 2019 - பாகிஸ்தான், இந்தியா என் இரு தரப்பிடமும் சர்வதேச நீதிமன்றம் பொது விசாரணை 
➤ 17 ஜூலை 2019 -  சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது