வெள்ளி, 19 ஜூலை, 2019

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழை! July 19, 2019

Image
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையோடு பலத்த காற்றும் வீசுவதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், பாலமோர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், தேரூர் போன்ற பகுதிகளில் சாரல் மழையோடு பலத்த காற்றும் வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. 
மேலும் சாலை தடுப்புகள் சாய்ந்து விழுந்ததில் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

credit ns7.tv