திங்கள், 22 ஜூலை, 2019

கோலாகலமாக நடைபெற்ற தென்னிந்திய புறா பந்தயம்..! July 22, 2019

Image
தென்னிந்திய புறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற புறாவின் உரிமையாளருக்கு, கார் பரிசாக வழங்கப்பட்டது. 
சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான புறா பந்தயம், 3  கட்டங்களாக நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன. முறையே 500 கிலோமீட்டர், 750 கிலோ மீட்டர், மற்றும் ஆயிரம் கிலோ மீட்டர் ஆகிய, மூன்று பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில், கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த, செய்யது அகமது இப்ராஹிமின் புறா, சாம்பியன் பட்டம் வென்றது. 
இதனையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டி நிறுவனர் பழனியப்பன், போபால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஐ.ஜி. அஜய் பரதன் ஆகியோர், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை, சாம்பியன் பட்டம் வென்ற புறாவின் உரிமையாளர் செய்யது அகமது இப்ராஹிமிற்கு வழங்கி, பாராட்டு தெரிவித்தனர். 
credit ns7.tv