திங்கள், 29 ஜூலை, 2019

25 ஆண்டுகள் கழித்தும் படித்த பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்.! July 29, 2019

Image
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முக்கொம்பு ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் உள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டிற்கு பிறகு சந்திக்கும் வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்துடன் பங்கேற்ற மாணவர்கள், பள்ளிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மற்றும் 500 மரக்கன்றுகளை வழங்கினர். 
மேலும், வரும் காலத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளி,மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி ஏதாவது ஒரு பள்ளியை தத்தெடுப்பதாக  உறுதியளித்தனர்.

credit ns7.tv