வியாழன், 25 ஜூலை, 2019

ஸ்டாலினுடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு! July 25, 2019

Image
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை, இஸ்லாமிய சமுதாயத்தை குறி வைத்து கைது நடவடிக்கை, சோதனைகளை மேற்கொண்டு வருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பீதியை எழுப்பும் வகையில் என்.ஐ.ஏ அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டினர். 
இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

Related Posts: