ஞாயிறு, 21 ஜூலை, 2019

10 ரூபாய்க்கு சேலை, 10 ரூபாய்க்கு சட்டை!” - ஜவுளிக்கடையின் அதிரடி ஆஃபர்...! July 21, 2019

சிவகங்கையில் ஜவுளிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு சலுகை விலையில் சேலை, சட்டை தருவதாக அறிவித்ததால் கடையின் முன்பு அலைமோதிய கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆடி மாதத்தையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு 10 ரூபாய்க்கு சேலையும், 10 ரூபாய்க்கு சட்டையும் வழங்கப்படும் என கடை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று அதிகாலையே கடையின் முன்பு சட்டை, சேலை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
News7 Tamil
பொதுமக்கள் அதிகளவில் கடையின் முன்பு குவிந்ததால், கடை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.
 
credit ns7.tv