திங்கள், 29 ஜூலை, 2019

மத்திய அரசை கடுமையாக சாடிய வைகோ..! July 29, 2019

Image
மத்திய அரசு வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், சமஸ்கிருதம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி எனவும், பொய்யை திணித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு, தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணித்து வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ் மொழியின் தொன்மை குறித்து, தவறாக எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுவதாக குறிப்பிட்டடார். மேலும், சமஸ்கிருதம் ஒரு உயிரற்ற மொழி என்றும் விமர்சித்தார்.

credit ns7.tv