ஞாயிறு, 28 ஜூலை, 2019

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! July 28, 2019

Image
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனாளர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது. இதனால், இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உள்ள நிலையில், வரும் 2022 ஆம் ஆண்டில் இது 80 கோடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

credit ns7.tv