வெள்ளி, 19 ஜூலை, 2019

சத்தியமங்கலம் அருகே புதிதாக பரவும் தொண்டை அடைப்பான் நோய்! July 19, 2019


Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொண்டை அடைப்பான் நோய் பரவி வருவதால், உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொண்டை அடைப்பான் நோய் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கம் காரணமாக பாதிக்கிப்பட்ட 10 வயது சிறுவன் காசி பிரசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கவிபிரியாவுக்கும் தொண்டை அடைப்பான் நோய் தாக்கியுள்ளது. 
அதே போல், மல்லியம்மன் துர்கம் பகுதியை சேர்ந்த, 12ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீரங்கன் என்பவரும் இந்த நோய் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தாக்கம் தொடர்வதால், உடனடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
credit ns7.tv