ஞாயிறு, 21 ஜூலை, 2019

குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்;

credit ns7.tv
Image
குற்றாலம் அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர். 
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் மிதமாக விழுவதை அடுத்து தடை நீக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
மெயினருவி, ஐந்தருவி, புலியருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். குளிர்ந்த காற்றின் பின்னணியில், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.