வெள்ளி, 19 ஜூலை, 2019

மணப்பாறை அருகே 4 ஆடுகள் மற்றும் ஒரு நாயைக் கொன்ற மர்ம வனவிலங்கு! July 19, 2019

Image
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வன விலங்கு தாக்கியதில் 4 ஆடுகள் மற்றும் நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. 
மணப்பாறை அருத்த முத்தழகம்பட்டி பகுதியில் துரைராசு என்பவர் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம வன விலங்கு, விவசாய பட்டியிலிருந்த ஆடுகளை தாக்கியுள்ளது. இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. 
மேலும், காவலுக்கு இருந்த சிப்பிப்பாறை வகை நாயையும் அந்த விலங்கு தாக்கிக் கொன்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த மருத்துவ குழுவினர், இந்த தாக்குதலுக்கு காரணம் ஓநாய் அல்லது செந்நாய்களாக இருக்கும் என தெரிவித்தனர்.

credit ns7.tv