Home »
» 370வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது: ராகுல் காந்தி August 06, 2019
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை கொண்டாடும்விதமாக நாடாளுமன்ற வளாக கட்டிடம் வண்ண விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டநிலையில், லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாமலும், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என மாநிலங்களவையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற வளாகம் வண்ணவிளக்குகளில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரை பிரிப்பதால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் என்றும் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய தேசம் மக்களால் உருவானது என்றும், இது நிலத்தால் உருவாகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
credit ns7.tv
Related Posts:
ஓகி புயலால் மீனவர்கள் மாயம் - டைம்-லைன் December 9, 2017
கன்னியாகுமரி மாவட்டத்தை சீர்குலைத்த ஓகி புயலால், 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். மீனவர்… Read More
இந்து அமைப்பின் பிரமுகரைக் கண்டித்து மறியல்; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது December 10, 2017
திருமாவளவன் தலைக்கு விலை வைத்த இந்து அமைப்பின் பிரமுகரைக் கண்டித்து, சென்னையில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்… Read More
நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அரசியல் தலைவர்களுக்கு அதிகளவில் பேனர்கள் : உயர்நீதிமன்றம் December 10, 2017
நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அரசியல் தலைவர்களுக்கு தினசரி பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து… Read More
அமைதியாக முடிந்தது குஜராத் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்! December 10, 2017
குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த முதற்கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.சவுராஷ்ட்ரா, தெற்கு குஜராத் பகுதிகளுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு … Read More
அடேங்கப்பா... குஜராத் தேர்தலில் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள்! December 9, 2017
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 397 கோடீஸ்வரரர்கள் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவ… Read More