புதன், 21 ஆகஸ்ட், 2019

உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு! August 21, 2019

Image
உத்தரப்பிரதேச அமைச்சர்களாக இருந்த ராஜேஷ் அகர்வால், ஸ்வாதந்த்ர தேவ் சிங், அர்ச்சனா பாண்டே உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், 5 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.  
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் முதல்வர் உள்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். அம்மாநிலத்தில், அதிகபட்சமாக 63 அமைச்சர்களை நியமிக்கலாம். 
பெரும்பாலான துறைகளில் அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், திட்டமிட்டப்படி இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

credit ns7.tv