சனி, 31 ஆகஸ்ட், 2019

அறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை!

Image
அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட விளம்பர பேனரில்  காஷ்மீர் நிகழ்வு குறித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.  இதில் பாஜகவை சேர்ந்த முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் பிரதமர் மோடியின் படத்துடன் காஷ்மீரை மீண்டும் இந்தியாவிற்கு தந்த கணபதி எனவும், இந்துக்களை காத்த மோடி என்ற வாசகங்கள்  இடம்பெற்றுள்ளன. 
இதுகுறித்து புகார் எழுந்ததையடுத்து அறந்தாங்கி காவல்துறையினர், பாஜக நிர்வாகி முரளிதரனை தொடர்பு கொண்டு அந்த விளம்பர பேனரை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால்,  அந்த பேனரை அகற்றக்கூடாது எனவும், அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக நிர்வாகி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv