வியாழன், 22 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் : கார்த்தி சிதம்பரம் August 22, 2019

Image
காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தம் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும், ஆனால், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கும் ப.சிதம்பரத்திற்கும் உள்ள நற்பெயரை கெடுக்கவே இதுபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 
இதனிடையே, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், உள்நோக்கத்துடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கூறினார், 

credit ns7.tv