புதன், 28 ஆகஸ்ட், 2019

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Image
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீண்டும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 
காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசைக் காற்றின் சாதக போக்கின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தென்மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

credit ns7.tv