செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

மு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..! August 20, 2019

Image
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பேசும்போது, கோடநாடு கொலை சம்பவத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் என்பவர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்குகள் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv