சனி, 24 ஆகஸ்ட், 2019

மேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....! August 24, 2019


Image
கோவை மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கி ஏந்திய பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை  மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா தளமான மேட்டுப்பாளையத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் கண்காணிப்பு தீவிரபடுத்தபட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஆற்று பாலம் அருகே தீவிர வாகன சோதனை நடத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பிற்காக பிளாக் கமெண்டோ என்ற சிறப்பு அதிவிரைவு படையினர் மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர்.  மேலும்  பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 
credit ns7.tv