செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு...!


Image
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவுகளை மறைப்பதற்காகத்தான்,  தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என பெரிதுபடுத்தப்படுவதாக மத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியுரில், விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூரின் தாயார் கௌசல்யாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி,  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்ததார். 
அப்போது வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கடுமையாகக் கண்டித்தார். இந்திய பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது என்று கூறிய கே.எஸ்.அழகிரி, இந்தியாவில் இருந்து அன்னிய மூலதனம் வெளியேறி வருவதாகக் குறிப்பிட்டார்.  
பொருளாதார சீரழிவுகளை மறைப்பதற்கு தான், தீவிரவாதிகள் வந்து விட்டார்கள், என்று பெரிதுபடுத்துப்படுவதாகக் கூறிய கே.எஸ்.அழகிரி, மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்றார். 

credit ns7.tv