வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Image
கர்நாடகாவை போன்று மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்
கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்று பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே அரசு, ஒரே தலைவர், ஒரே கட்சி முறையை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறினார். இந்தியாவில் அதிபர் முறையை கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் அவர் விமர்சித்தார். 
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, இதனை எந்த கட்சியும் கண்டிக்கவில்லை என்று கூறினார். இதேபோன்று, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கப்போவதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருவதாகவும், அது ஒருபோதும் நடக்காது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

credit ns7.tv