செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

Image
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
பண்டைய தமிழர் நாகரீகத்தை உணர்த்தும் கீழடியில், 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  முருகேசன் என்பவரது நிலத்தில் நடைபெற்ற அகழாய்வில், சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 
செங்கற்களால் கட்டப்பட்ட இந்த தொட்டியின் அளவு 4 அடி உயரமும், 2 அடி அகலமும், 5 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவில்லை. 
இந்த இடத்தின் அருகிலேயே இரும்பு கழிவுகள் அதிகளவில் கிடைத்துள்ளன, எனவே இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இருந்திருக்க வாய்ப்புண்டு, இரும்பை குளிர்விக்க இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தி இருக்கலாம் என கருதுகின்றனர்.  ஆய்விற்கு பின்னரே இதன் உண்மையான பயன்பாடு தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv

Related Posts:

  • கேன்சரை தடுக்க உதவும் பழங்கள் திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் ச… Read More
  • இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... இதுவாடா மார்க்கம் மூடர்களே.....இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்.......இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... (function(d, s, id) { var j… Read More
  • A/C அறையில் சிறுநீரக கோளாறு !!! நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDN… Read More
  • அல்லாஹூ அக்பர்... கவிதா கதீஜாவாக... அல்லாஹூ அக்பர்... தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொ… Read More
  • தொப்பை குறைய எளிய பயிற்சி...!!! முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரைய… Read More