செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

Image
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
பண்டைய தமிழர் நாகரீகத்தை உணர்த்தும் கீழடியில், 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  முருகேசன் என்பவரது நிலத்தில் நடைபெற்ற அகழாய்வில், சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 
செங்கற்களால் கட்டப்பட்ட இந்த தொட்டியின் அளவு 4 அடி உயரமும், 2 அடி அகலமும், 5 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவில்லை. 
இந்த இடத்தின் அருகிலேயே இரும்பு கழிவுகள் அதிகளவில் கிடைத்துள்ளன, எனவே இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இருந்திருக்க வாய்ப்புண்டு, இரும்பை குளிர்விக்க இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தி இருக்கலாம் என கருதுகின்றனர்.  ஆய்விற்கு பின்னரே இதன் உண்மையான பயன்பாடு தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv