ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்! August 24, 2019

Image
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது. 
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த் உதயகலா, அவரது கணவர் தயாபர ராஜ் மற்றும் நான்கு குழந்தைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர். அவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்ததால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 20ம் தேதி முகாமில் இருந்து வெளியேறிய அவர்கள், மாயமானதாகக் கூறப்படுகிறது. 
வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை தேடி வருகின்றனர். உதய கலா, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
credit ns7.tv