வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து! August 23, 2019


Image
ப.சிதம்பரம் மீதான அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தவிடு பொடி ஆக்குவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். திமுக காங்கிரஸ் இடையே நல்ல புரிதல் உள்ளது எனத் தெரிவித்த அவர், பாஜகவின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதால், சிதம்பரம் குறி வைக்கப்படுவதாக குறிப்பிட்டார். 
தமிழகத்திற்கு யார் அவமானம் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அதிமுக அமைச்சர்கள் போல், பொது வாழ்க்கையில் தாழ்மை அடைந்தவர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் அழகிரி கூறினார். 

credit ns7.tv