சனி, 24 ஆகஸ்ட், 2019

ஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துகள் மூலம் அம்பலமாகியுள்ளது: கே.எஸ்.அழகிரி August 24, 2019

Image
பிரதமர் மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சிறுசிறு நடவடிக்கைகளை பொதுவெளியில் பாராட்டி கருத்து தெரிவிப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார். இவர்களது சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துகள் மூலம் அம்பலமாகியுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகள் போர்க்களத்தில் பாஜகவை எதிர்த்து போராடுகிற தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும் என்று கூறியுள்ளார். இத்தகையை குழப்பவாதிகளை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

credit ns7.tv