புதன், 28 ஆகஸ்ட், 2019

சந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற்றி...!

Image
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயானை 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி இன்று வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது.
நிலவின் தென்துருவப்பகுதியை ஆராய சந்திரயான் விண்கலம், கடந்த மாதம் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் கடந்த 20 ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. இதனை அடுத்து, விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. 
நிலவின் சுற்று வட்டப்பாதையில் தற்போது வலம் வரும் விண்கலத்தை நிலை உயர்த்தும் பணி 3 வது கட்டமாக இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வரும் 2 ஆம் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி பிரியும் என்றும், வரும் 7 ஆம் தேதி நிலவில் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
credit NS7.tv