செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொய் சொல்கிறார் - ஃபரூக் அப்துல்லா August 06, 2019

Image
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொய் சொல்வதாக, "காஷ்மீர் சிங்கம்" என போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீநகரில் உள்ள தமது வீட்டின் மேல்தளத்தில் நின்றபடி, செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய பரூக் அப்துல்லா, தாம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்றார். தமது வீட்டுக் கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், தம்மால் எப்படி வெளியே வரமுடியும் எனவும், அவர் கேள்வி எழுப்பினார். இன்னும் எத்தனை பேர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரியவில்லை, எனவும் அவர் ஆவேசமாக கூறினார். 
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்வதாக குறிப்பிட்ட ஃபரூக் அப்துல்லா, மத்திய அரசு, தங்களது முதுகில் குத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார்.   மேலும், முதுகில் குத்துவதை விட, நெஞ்சில் சுடுங்கள் என்றும், பரூக் அப்துல்லா ஆவேசமாகக் கூறினார்.

credit ns7.tv