புதன், 7 ஆகஸ்ட், 2019

மேகதாது விவகாரம் - கைவிரித்த மத்திய அரசு...! August 07, 2019

Image
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்துள்ளது. 
கடந்த ஜுன் மாதம் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல் என குறிப்பிட்டுருந்தார். 
தமிழக அரசின் ஒப்புதல் இன்றி நடக்கும் இந்த முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். மேலும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்துமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார். 
ஆனால் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை ஜூலை 19ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை பரிசீலித்தது. எனினும் தற்போது அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்துள்ளது.

credit ns7.tv

Related Posts:

  • ஹஜ் கையேடு ஹஜ் கையேடு ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்ட… Read More
  • Quran -(கொலையை) நீதி (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால… Read More
  • ரூ.74 லட்சம் பரிசை அகதிகளுக்கு வழங்கிய பெண் ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.ஈரான் நாட்ட… Read More
  • ஜெர்மனி யா அல்லாஹ்!! ஜெர்மனி மக்களுக்கு உன்னுடைய அருளை பொழிவாயாக Hundreds of… Read More
  • தவறான நம்பிக்கை ஹஜ்பயணிகளின் கனிவான கவனத்திற்கு....!! அல்லாஹ்வுடைய மாபெரும் பேரருளால் மக்காவை நோக்கி ஹஜ் பயணிகளின் வருகை குவிந்த வண்ணம் இருக்கிறது.. மக்க மாநகரே ம… Read More