புதன், 16 டிசம்பர், 2020

ஆதார் அடிப்படையில் உடனடி மின்-பான் பெறுவது எப்படி


ஆதார் அடிப்படையில் உடனடி மின்-பான் பெறுவது எப்படி என்பதை பார்போம்:

1. முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Incometaxindiaefiling.Gov.In இல் உள்நுழைய வேண்டும்.

2. முதல் பக்கத்தின் இடது புறத்தில், ‘விரைவு இணைப்புகள்’ (குயிக் லிங்க்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

3. அடுத்து சற்று கீழே, ‘இன்ஸ்டன்ட் இ-பான்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.

4. ‘Apply உடனடி மின்-பான்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்

5. உடனடி மின்-பான் விண்ணப்பிக்க ஒரு படிவம் காண்பிக்கப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ஆதார் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பி பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்லில் உள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் புதிய பான் ஒதுக்கப்படும்.

7. புதிய பான் கார்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் முகவரி பற்றிய பதிவுகள் இருக்கும்.

8. பான் ஒதுக்கப்பட்டதும், சில நாட்களுக்குள் தபால் மூலம் பான் கார்டு வீட்டிற்கு வரும்.

வருமான வரித் துறையின் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு படியாக இன்ஸ்டன்ட் பான் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு மேலும் எளிதாக்குகிறது.

பான் கார்டு பெறுவதற்காக ஏஜெண்டுகளை நம்பி 500, 1000 என பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உணருங்கள்.