வெள்ளி, 18 டிசம்பர், 2020

வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைமையில் தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்

  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் . வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம். திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு.

தமிழகம் மீட்போம் என்ற 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அவற்றை 10 ஆண்டுகளாகியும் அதிமுக அரசு இதுவரை முடிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ’