செவ்வாய், 1 டிசம்பர், 2020

துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களை மீட்கவேண்டும் என மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.