வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது : ரிசர்வ் வங்கி August 31, 2018

500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 892 நோட்டுகள் சிக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை பொருத்தவரை, 2016-17-ஆம் ஆண்டில் 638 நோட்டுக்கள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில்...

சமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய வம்சாவளி இளைஞர்! August 30, 2018

சிங்கப்பூரில் வசித்துவரும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், கிழிந்த நிலையில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டு கொடியின் படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததற்காக அவரது வேலை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்துவருபவர் அவிஜித் தாஸ் பட்னயிக். இவர், கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்....

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு! August 31, 2018

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் அந்த கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைகிறது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை, தொழில் மூலம்...

​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு வந்தடைந்தது வைகை நீர்! August 31, 2018

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு முதன்முறையாக வந்தடைந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, வைகையிலிருந்து உபரி நீராக வெளியேறும் நீரை உசிலம்பட்டி பகுதி மக்களின் விவசாய பாசனத்திற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக...

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளுடன் 8-வது இடத்தில் இந்தியா! August 29, 2018

18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கப்பதக்கங்கள் உள்பட 54 பதக்கங்களை பெற்று இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங், இறுதிச்சுற்றில் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஆசிய விளையாட்டுப் போட்டி ஹெப்டத்லான்...

புதன், 29 ஆகஸ்ட், 2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்திய இந்திய அணியினர்! August 28, 2018

ஆசிய விளையாட்டுப் போட்டியின் குழு வில் வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர். முதலில் நடந்த பெண்கள் குழு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பெண்கள் அணி 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து வெள்ளியை வென்றது.இதேபோல் குழு வில் வித்தை...

மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம்! August 28, 2018

இன்று கைதான மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என கைதுக்கு  வலியுறுத்துள்ளது.இன்று டெல்லி, ஜார்கண்ட், மும்பை, மகாராஷ்டிரம், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள முக்கிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் முதலானோர் வீடுகள் சோதனையிடப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேரா. அ.மார்க்ஸ் மற்றும்...

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் காவலை நீட்டித்து உத்தரவு! August 28, 2018

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை  நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவலை வரும் 10ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபரி நீர் போக்கி மூடப்பட்டது! August 28, 2018

மேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியாக குறைந்ததையடுத்து வெளியேற்றம் 20,800 கன அடியாக குறைக்கப் பட்டதால் இன்று காலை 8.00 மணி முதல்16-கண் உபரி நீர் போக்கி மூடபட்டது.கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23ம் தேதி அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. அப்போது நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு...

திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்! August 28, 2018

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படுகிறது. திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின்...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! August 27, 2018

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி நாளிதழின் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துகளை கருணாநிதி வெளியிட்டதற்காக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன....

​Wifi-யை இப்படியும் பயன்படுத்தலாமா? August 27, 2018

பொது இடங்களில் பயன்படுத்தப்படும் வைஃபை மூலம் , ஆயுதங்கள் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை கண்டுபிடிக்க முடியும் என அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொது இடங்களில் தற்பொழுது பயன்படுத்தப்படும் Bomb Scanning Device அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகவும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், குறைந்த விலையிலேயே...

​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு! August 27, 2018

https://www.motor1.com/news/263562/flood-guard-car-bag/அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.. வரலாற்றிலேயே மோசமான வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இதில் சுமார் 370க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.வீடு, கட்டுமான சேதம், பொருளாதார இழப்பு...

​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் #DMKThalaivarStalin ஹேஷ்டாக்! August 28, 2018

#DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை அப்பதவிக்கு...

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்! August 27, 2018

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மக்களவைக்கு அடுத்த ஆண்டும் தேர்தல்...

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற்பரப்பு திட்டம்! August 27, 2018

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற் பரப்பு திட்டம், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழும் புதுச்சேரியின் அழகினை ரசிக்க, நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரையின் அழகை ரசிக்க தவறுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பல மீட்டர் தூரத்திற்கு...

​விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா பெண்கள்! August 27, 2018

மியான்மரில் இருந்து அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண்கள், கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சுமார் 7 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அங்குள்ள காக்ஸ் பஜார் முகாமில் தங்கவைக்கப்பட்ட ரோகிங்கியா பெண்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்டோர்...

கேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ.900 வரை சரிவு! August 27, 2018

கேரளாவில் வெள்ளப்பாதிப்பு எதிரொலியால் பாசிப்பயறு விலை, மூட்டைக்கு 900 ரூபாய் சரிந்தது. விருதுநகர் சந்தையில் இரூநது கேரளாவுக்கு அனுப்பப்படும் பாசிப்பயறு தேக்கமடைந்துள்ளதால், ஏழாயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மூட்டை, ஆறாயிரத்து 500 ரூபாயாக சரிந்துள்ளது. மேலும், கேரளாவுக்கு பருப்பு அனுப்புவது தற்போது குறைந்தாலும், பருப்பு விலை குறையாமல் அதே விலையில் நீடிக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஒரு டின் நல்லெண்ணெய், மற்றும் கடலை எண்ணெயின்...

பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொறியியல் பட்டதாரி! August 27, 2018

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில், பொறியியல் பட்டதாரி தம்பதி அசத்தி வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால், தனது சொந்த ஊரில் பசுமைக்குடில் அமைத்து பயிரிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய மனைவி உமாமகேஸ்வரியும் முழு ஆதரவு தெரிவித்ததால்,...

என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மு.க.அழகிரி August 27, 2018

திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்மதுரையில், தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கருணாநிதி இருந்ததால் ஸ்டாலின் செயல் தலைவரான போது எதிர்க்கவில்லை என்றார். திமுகவில் தன்னை மீண்டும் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என...

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி! August 27, 2018

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக, சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூரணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு...

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின் August 26, 2018

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததையடுத்து அவர் தலைவராவது உறுதியாகியுள்ளது. 28ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாக உள்ளது. திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான...

மு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை! August 26, 2018

திமுகவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலின், அரசியலில் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்...* 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார் மு.க.ஸ்டாலின். * 1967ல் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்த தேர்தலின் போது 14 வயதில் மு.க.ஸ்டாலின் பிரச்சார களத்தில் இறங்கினார்.* 1968ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை உருவாக்கினார்.* 1969ம் ஆண்டு...

சனி, 25 ஆகஸ்ட், 2018

பின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! August 24, 2018

இருசக்கர வாகனங்களின், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மோட்டார் சட்ட விதிகளின்படி, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறையை தமிழக அரசு அமல்படுத்தக் கோரி, சென்னை...

கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம்: ஜி.கே.வாசன் August 25, 2018

தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று வாசன் பார்வையிட்டார். 320 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி வறண்டு கிடப்பதை பார்வயிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன், மேட்டூர்...

​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை: கேரளா முதல்வர் August 25, 2018

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து கேரள மாநிலம் முழுவதும் கடுமையான மழை பொழிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக கேரளாவின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 13ல்...

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா? August 24, 2018

இக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை:1....

​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது பிரதமர்! August 24, 2018

கடந்த 1975ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா 5 பிரதமர்களை கொண்டிருந்தது, இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 5வது பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியில் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு ஏற்பட்ட எதிர்ப்பையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிஸ் தேர்வாகியுள்ளார். மால்கம் டர்ன்புல் தாராளவாத கொள்கைகளை கொண்டிருந்தார்....

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா? August 23, 2018

ஸ்மார்ட்போனை கழிவறை உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதால் எத்தகைய ஆபத்துகள் உருவாகும் என்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.காலையில் கண் வழிப்பது தொடங்கி, இரவு உறங்கும் முன்பு வரை  ஒரு நாள் பொழுது என்பது சிலருக்கு செல்போனில் தொடங்கி செல்போனில் முடிகிறது. அதுவும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தான் உடலின் ஒரு உறுப்பு போல செல்போனை பயன்படுத்துகிறார்கள். கழிப்பறைகளில்...

முதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு! August 24, 2018

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான திமுகவின் ஊழல் புகார் குறித்து, பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, வழக்குப்பதிவு செய்யக் கோரியும், திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்வர் பழனிசாமியின்...

கேன்சரை குணப்படுத்துமா மஞ்சள்? August 23, 2018

கேன்சரை குணப்படுத்துவதற்கு மஞ்சள் ஒரு தீர்வாக அமையுமா என்று இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுவது மஞ்சள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், அனைத்து விதமான உணவு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும். மஞ்சளில் இருக்கும் Curcumin என்ற பொருள், கேன்சரை குணப்படுத்துவதற்கு உதவும்...

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்! August 24, 2018

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து உடைந்த மதகுகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மதகுகள் உடைந்த பகுதிகளில், முதற்கட்டமாக 110 மீட்டர் தொலைவுக்கு...