வியாழன், 2 ஆகஸ்ட், 2018

காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலர்களை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள்! August 2, 2018

Image

ஆந்திராவில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை விடுவிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லூர் அடுத்த ராபூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி, போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், காவல் நிலையத்துக்கு சென்ற ராஜேஷின் தாய் தமது மகனை விடுவிக்குமாறு கூறினார். ஆனால் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் ராஜேஷின் தாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை சரமாரியாக தாக்கினர். 

இந்த சம்பவத்தில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

source
http://ns7.tv/ta/tamil-news/india/2/8/2018/people-went-inside-police-station-and-attacked-police